நம்மாழ்வார் திருநட்சத்திரம்; காரமடை அரங்கநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2024 01:05
காரமடை; வைணவத்தில் பன்னிரு ஆழ்வார்களின் முக்கியமானவர் நம்மாழ்வார். இவரது ஜெயந்தி வைணவ திருத்தலங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரசித்தி பெற்ற காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நம்மாழ்வார் ஜெயந்தி விழா நடந்தது. அதிகாலையில் மூலவர் ரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம் கால சந்தி பூஜை முடிந்து ராமானுஜர் சன்னதியில் உற்சவமூர்த்தி நம்மாழ்வார் எழுந்தருளினார். அங்கு விஸ்வக்சேனர் பூஜை புண்யா வசனம், கலச ஆவாஹனம் முடிந்து மூலவர் ராமானுஜர் மற்றும் உற்சவர் நம்மாழ்வாருக்கு நெய் தேன் பால் தயிர் இளநீர் மஞ்சள் சந்தனம் உள்ளிட்ட ஸ்தபன திருமஞ்சனம் நடந்தது. அப்போது புருஷ சுக்தம் நாராயண சுக்தம் ஸ்ரீ சுத்தம் பிரபந்தத்தில் உள்ள நீராட்டம் சேவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெள்ளி பல்லக்கில் ரங்க மண்டபத்திலே ஸ்ரீ ரங்கநாதர் முன் நம்மாழ்வார் உற்சவமூர்த்தி எழுந்தருளினார். தொடர்ந்து மாலை சடாரி மரியாதை அளிக்கப்பட்டது. ஸ்தலத்தார்கள் தமிழ் வேதமாகிய திவ்ய பிரபந்தத்தில் கோவில் திருவாய்மொழி பாசுரங்கள் சேவித்தனர். பின்னர் பெருமாளிடம் இருந்து மாலை,சடாரி மரியாதை அளிக்கப்பட்டு வெண்பட்டு குடை மேல காலங்கள் முழங்க திருக்கோவில் வலம் வந்து ராமானுஜ சன்னதியை அடைந்தார். பின்னர் உச்சகால பூஜை சாற்றுமரை சேமிக்கப்பட்டு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன இந்நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள் அர்ச்சகர்கள் மிராசுதாரர்கள் அறங்காவலர் குழுவினர் நிர்வாக அலுவலர்கள் பக்தர்கள் ஏராளமான பங்கேற்றனர்