சூலூர்; வைகாசி திருவிழாவை ஒட்டி முருகன் கோவில்களில் பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சூலூர் வட்டாரத்தில் உள்ள சின்னியம் பாளையம் வேல்முருகன் கோவில், பொன்னாண்டாம்பாளையம் சென்னியாண்டவர் கோவில், கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில், கண்ணம்பாளையம் பழனி ஆண்டவர், காங்கயம் பாளையம் சென்னியாண்டவர் கோவில், சூலூர் சிவன் கோவில் மற்றும் சூலூர் பழனியாண்டவர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடந்தது. மூலவர் மற்றும் உற்சவருக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு, அபிஷேக பூஜை நடந்தது. தொடர்ந்து அர்ச்சனை மற்றும் அலங்கார பூஜை நடந்தது. இதில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் முருக பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் திருவீதி உலா நடந்தது.