பதிவு செய்த நாள்
22
மே
2024
05:05
வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வைகாசி விசாகத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா, கந்த சஷ்டி திருவிழா, வைகாசி விசாகம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்நிலையில் வைகாசி விசாகத்தை ஒட்டி இன்று அதிகாலை, 5:00 மணிக்கு, கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டது. அதன்பின், காலை 6:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு, பால், சந்தனம், தயிர், நெய், தேன், இளநீர் உள்ளிட்ட, 16 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சுப்பிரமணிய சுவாமி விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். உற்சவமூர்த்திகளான, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, தங்க கவசத்தில், தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வைகாசி விசாகத்தையொட்டி, மருதமலையில் நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் அதிகாரத்தில் வாகனங்கள் வெகுநேரம் வரிசையில் நின்றது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.