Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் மழை ... வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் யாக வேள்வி பூஜை வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் யாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழனி ஆண்டவர் கோவிலில் பிரம்மோற்சவம் நிறைவு: திடீர் மழையால் உற்சாகத்தில் நனைந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
வடபழனி ஆண்டவர் கோவிலில் பிரம்மோற்சவம் நிறைவு: திடீர் மழையால் உற்சாகத்தில் நனைந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

23 மே
2024
08:05

சென்னை : வடபழனி ஆண்டவர் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவம், கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் வாகன புறப்பாடு விமர்சையாக நடந்தது.

வைகாசி விசாகமான, நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, பள்ளியறை பூஜைகள் நடந்தது. காலை 9:00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சண்முகர் வீதி உலா நடந்தது. தொடர்ந்து தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. பின், யாகசாலை பூஜைகள் துவங்கி மகா பூர்ணாஹுதி, கடப்புறப்பாடு சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக, நேற்று மாலை திருக்கல்யாண உற்சவம் துவங்கியது. நிகழ்வு துவங்கும்போது, வடபழனி பகுதியில் மட்டும் மழை பெய்தது. திடீர் மழையால், பக்தர்கள் உற்சாகத்தில் நனைந்து, அரோகரா... என, விண்ணதிர கோஷம் எழுப்பினர். பின், சீர்வரிசை தட்டு வைத்து, யஜமான சங்கல்ப நிகழ்வு நடந்தது. இதில், திருக்கல்யாண கோவில் தக்கார் இல.ஆதிமூலம், துணைக்கமிஷனர் ஹரிஹரன் ஆகியோருக்கு சங்கல்பம் செய்யப்பட்டது. அடுத்ததாக, கலச பூஜை நடத்தப்பட்டு சுவாமிக்கு பூணுால் மாற்றி, காப்பு கட்டும் வைபவம் நடந்தது. யாகசாலை வளர்த்து ஹோமங்கள் நடந்தன. அதன் தொடர்ச்சியாக, மாலை மாற்றுதல், பாலும் பழமும் வழங்கும் நிகழ்வு நடந்தது. பின், திருமாங்கல்ய பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து திருமாங்கல்ய தாரணம், பொரியிடுதல் நிகழ்வு தீபாராதனை நடந்தது. முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம் முடிந்ததும், மொய் எழுதும் வைபவம் நடந்தது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு, வடபழனி ஆண்டவர் கோவில் அன்னதானக் கூடத்தில், 750 பக்தர்களுக்கு வடை, பாயாசத்துடன் இரவு கல்யாண விருந்து வழங்கப்பட்டது. நேற்று இரவு மயில்வாகனத்தில் புறப்பாடு நடந்தது. பின், கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது. இன்று இரவு விசேஷ புஷ்ப பல்லக்கில் சுப்பிரமணியர் புறப்பாடு நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித்திருவிழாவின் 10ம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழாவில் நேற்று அமுதுபடையால் நிகழ்ச்சி வெகு ... மேலும்
 
temple news
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோவிலில் ஆனி மாத பௌர்ணமி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே பரியாமருதிப்பட்டி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் ஆனித் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் 108 சங்காபிஷேகம் யாகபூஜை நடைபெற்றது.பழநி மலைக்கோயிலில் நேற்று உச்சிகால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar