அயோத்தி ராமர் கோவில் வடிவமைப்பில் சீரடி சாய்பாபா கோவில்; பூமி பூஜையுடன் பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மே 2024 10:05
அயோத்தி ராமர் கோவில் போன்ற வடிவமைப்பில் ரூ.15 கோடி செலவில் பவானிசாகர் தென் சீரடியில் சக்தி சாய் ராம் தர்மஸ்தலா கோவில் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே தென்சீரடியில் சக்தி சாய்ராம் தர்மஸ்தலா கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தினந்தோறும் சாய்பாபாவுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இக் கோவில் வளாகத்தில் புதியதாக அயோத்தி ராமர் கோவில் போன்ற வடிவில் ரூ.15 கோடி செலவில் 32 ஆயிரம் சதுர அடியில் சக்தி சாய் ராம் தர்மஸ்தலா கோவில் கட்டப்பட உள்ளது. இக்கோவில் கட்டுமான பணியை அயோத்தி கோவில் வடிவமைத்த பொறியாளர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்த மால்யா மிட் ஹன்லால், சாம்லால்சோம்பூரா ஆகியோர் கட்டுமானப் பணி மேற்கொள்கின்றனர். இதற்கான பூமிபூஜை கோவில் வளாகத்தில் நடைபெற்றது. கணபதி பூஜையுடன் தொடங்கிய பூமி பூஜை கால்கோள் விழாவில் பக்தர்கள் மலர் தூவி பாலபிஷேகம் செய்து வழிபட்டனர். தமிழகத்தில் முதன் முதலில் இங்கு தான் ராமர் கோவில் போன்ற வடிவமைக்கப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த பூஜையில் இஸ்ரோ சந்திரயான் 2 உதவி திட்ட இயக்குநர் கல்பனா அரவிந்த் கல்ந்துகொண்டு பேசுகையில் சந்திரயான் 3 தொடங்கும்போது கடவுளை கும்பிட்டு தான் பணியை தொடங்கினோம். சந்திரயான் 3 உலக அளவில் நமது நாட்டுக்கு பெருமையை தேடி தந்தது என்பது அனைவருக்கும் தெரியும், தான் சந்திரயான் 2 வில் உதவி திட்ட இயக்குநராக பணியாற்றியதாக தெரிவித்தார்.