அனுஷத்தில் அவதரித்த அற்புதர்; மதுரையில் மகா பெரியவரின் 131வது ஜெயந்தி விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மே 2024 11:05
மதுரை: காஞ்சி ஸ்ரீ மகா பெரியவரின் 131வது ஜெயந்தி விழா, மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில், இன்று (மே 24) காலை 8 மணிக்கு மதுரை எஸ்.எஸ்.காலனி பொன்மேனி நாராயணன் ரோட்டில் அமைந்துள்ள எஸ்.எம்.கே திருமண மண்டபத்தில் நடைபெற்றது. காஞ்சி ஸ்ரீ மகா பெரியவர் நடமாடும் தெய்வம் என்று எல்லோராலும் அன்பாக போற்றப்படுகிறார். மகா பெரியவரின் 130வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு சந்தோஷ் சாஸ்திரிகள் தலைமையிலான 12வேத விற்பன்னர்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. காஞ்சி ஸ்ரீ மகா பெரியவரின் ஐம்பொன்னிலான விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம் மகன்யாசம், புஷ்பாஞ்சலி, மகா தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. விழாவை மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாடு செய்திருந்தார்.