Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் ... சிவனடியார் மீது பக்தி செலுத்துவதும் சிறந்தது! சிவனடியார் மீது பக்தி செலுத்துவதும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை பத்திரகாளியம்மன் கோவிலில் குண்டம் விழா
எழுத்தின் அளவு:
காரமடை பத்திரகாளியம்மன் கோவிலில் குண்டம் விழா

பதிவு செய்த நாள்

24 மே
2024
04:05

மேட்டுப்பாளையம்; காரமடை அருகே உள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் நடந்த விழாவில், ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி, தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

காரமடை அருகே வெள்ளியங்காடு ஊரில், மிகவும் பழமை வாய்ந்த பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் குண்டம் விழா கடந்த, 19ம் தேதி கிராம சாந்தியுடன் துவங்கியது. 20ம் தேதி அம்மன் அழைப்பும், கம்பம் நடுதலும், சக்தி கரகம் அழைத்து வரப்பட்டது. 21ம் தேதி இரவு வள்ளாளன் கோட்டை சூரசம்ஹாரம் நடைபெற்றது. கடந்த, 22ம் தேதி வெள்ளியங்காடு ஊரிலிருந்து அம்மன் சுவாமியை, சிறப்பு அலங்காரத்தில் கோவிலுக்கு அழைத்து வந்தனர். கோவில் தலைமை பூசாரி வேலுசாமி குண்டத்திற்கு பூஜை செய்து, முதலில் இறங்கினார். அதைத் தொடர்ந்து உதவி பூசாரிகள், ஆண், பெண், சிறுவர், சிறுமியர் என ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினர். மாலையில் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்தனர். மறுநாள் காலை அபிஷேக ஆராதனையும், மஞ்சள் நீராட்டும், அம்மன் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. இக்குண்டம் விழாவில் வெள்ளியங்காடு, கெம்மாரம்பாளையம், அட்டப்பாடி, முத்துக்கல்லூர், சுண்டக்கொரை, ஆதிமாதையனூர், காளியூர், பனப்பாளையம் புதூர், உள்ளிட்ட சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் செயல் அலுவலர் சபரீஷ்வரி, வெள்ளியங்காடு, கெம்மாரம்பாளையம், அட்டப்பாடி ஆகிய கிராம ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேலூர்; திருவாதவூரில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருமறைநாதருக்கு வேதநாயகி அம்பாள் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், வைகாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 
temple news
மறைமலை நகர்; பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில், வைகாசி மாத தேரோட்டம் விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், 400 கோடி ரூபாய் மதிப்பில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான மலை மேலுள்ள காசி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar