Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஊஞ்சல் உற்சவம் பக்தர்கள் பரவசம்! திருப்பதி திருமலையில் 19ம் தேதி புஷ்ப யாகம்! திருப்பதி திருமலையில் 19ம் தேதி புஷ்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செண்பகவல்லியம்மன் கோயில் ஐப்பசி தேரோட்டம் கோலாகலகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2012
11:11

கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு பெற்ற சிவத்தலங்களில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி பக்தர்களிடம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்தாண்டு ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த அக்.30ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகப்படிதாரர் முறையில் சிறப்பு பூஜைகளும், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்பாள் திருவீதி உலாவும் நடந்தது. இந்நிலையில் திருக்கல்யாண திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று நடந்தது. நிகழ்ச்சியையொட்டி அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு, திருவனந்தள் பூஜை நடந்தது. தொடர்ந்து செண்பகவல்லி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. இதையடுத்து காலை சுமார் 9 மணியளவில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருத்தேரில் எழுந்தருளல் நடந்தது. தொடர்ந்து மாலையில் சிறப்பு பூஜைகளையடுத்து திருத்தேரானது நான்கு ரதவீதிகளில் வலம் வந்தது. இதில் திருத்தேரை கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர்ராஜூ வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். இதையடுத்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஓம்சக்தி பராசக்தி பக்த கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். மேலும் தேர்த்தடி முறைதாரர்களான சங்கரலிங்கபுரம் பாலமுருகன் குழுவினர் தேர்த்தடி போட்டனர். விழாவில் கோவில்பட்டி ஆர்டிஓ சுதர்சன், டிஎஸ்பி ராஜேந்திரன், செண்பகவல்லியம்மன் கோயில் நிர்வாக அலுவலர் கசன்காத்தபெருமாள், முன்னாள் திருப்பணிக்குழு தலைவர் நாகஜோதி, முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் திருப்பதிராஜா, வணிக வைசிய சங்க தலைவர் குருசாமி, செயலாளர் பாலமுருகன், பொருளாளர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உள்பட கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சனிக்கிழமை திரயோதசி திதியுடன் வருவது சனி மகா பிரதோஷமாகும். சிவபெருமான் ஆலகால நஞ்சை உண்டு அகிலத்ததை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதியோகி மற்றும் 63 தேர்களுடன் பாதயாத்திரையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு மாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பழநி ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் மாசி மாத பிறப்பு, விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 ஆண்டின் மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar