Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சிபுரம் கங்கையம்மன் கோயிலில் ... செஞ்சி பூரணி பொற்கலை சமேத ஐயனார் கோவிலில் கும்பாபிஷேகம் செஞ்சி பூரணி பொற்கலை சமேத ஐயனார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூண்டி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பூண்டி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2024
11:06

அவிநாசி; திருமுருகன்பூண்டியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பூமி நீளா ஸமேத ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவிலில், மஹா கும்பாபிஷேகம், கோலாகலமாக நடைபெற்றது. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேக விழா கடந்த, 14ம் தேதி காலை முதற்கால யாகபூஜையுடன் துவங்கியது. நேற்று அதிகாலை, நிறைவு கால யாகசாலை பூஜையை தொடர்ந்து, காலை, 7:05 மணிக்கு மூலவர் விமானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரண்டிருந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள், ‘ஓம் நமோ நாராயணா... கோவிந்தா, கோபாலா’ என கோஷமிட்டு, பெருமாளை வழிபட்டனர்.

கும்பாபிஷேகத்தை திருவெள்ளறை மேலத்திரு மாளிகை சவும்ய நாராயணாச்சார்ய சுவாமி நடத்தி வைத்தார். பேரூர் ஆதீனம் மருதாசல அடிகள், சரவணம்பட்டி கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமி, திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயம் காமாட்சிதாச சுவாமி, கூனம்பட்டி ஆதீனம் ராஜசரவண மாணிக்க சுவாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதன்பின, திருமுருகநாத சுவாமி அறக்கட்டளை சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் திருக்கல்யாண உற்சவம், பெருமாள் திருவீதி உலாவும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் விமலா, அருள்மிகு திருமுருகநாத ஸ்வாமி அறக்கட்டளை திருப்பணி குழு, ருத்ராபிஷேக குழு, சேக்கிழார் புனிதர் பேரவை, அறங்காவலர் குழுவினர் மற்றும் பெருமாள் கோவில் பட்டாச்சாரியார்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற, 108 திவ்யதேசங்களில், 57 வது திவ்யதேசமாக விளங்கும் காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவங்கியது.பேரூர் பட்டீஸ்வரர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சன்னிதானம் ஆசியுடன், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த இளையனார்வேலுாரில் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar