ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ.1.15 கோடி காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2024 12:06
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.1.15 கோடி உண்டியல் வருவாயாக கிடைத்தது.
ராமேஸ்வரம் கோயிலில் 25 நாட்களுக்கு பின் நேற்று சுவாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் சன்னதி முன்புள்ள உண்டியல்களை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் முன்னிலையில் கோயில் ஊழியர்கள் திறந்து காணிக்கைகளை சேகரித்தனர். இதனை கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் கோயில் ஊழியர்கள், சேலம் பகுதியை சேர்ந்த சிவனடியார் குழுவினர் காணிக்கைகளை எண்ணினார்கள். இதில் ரொக்கம் ரூ.1கோடியே 15 லட்சத்து 19 ஆயிரத்து 204 ரூபாயும், தங்கம் 71 கிராம், வெள்ளி 4 கிலோ 80 கிராம் காணிக்கையாக கிடைத்தது.