பதிவு செய்த நாள்
12
நவ
2012
11:11
தலைவாசல்: தலைவாசல் அருகே தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். தலைவாசல் அருகே உள்ள, தென்பொன்பரப்பி கிராமத்தில், பழமையான சொர்ணபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, பிரதோஷம் உள்ளிட்ட பூஜைகள் வெகுவிமரிசையாக நடந்து வருகிறது.
நவ.11, பிரதோஷத்தையொட்டி, சொர்ணபுரீஸ்வரர், நந்தி பெருமானுக்கு, பால், மஞ்சள், தயிர், நெய், தேன், பழம், பன்னீர் என, 16 வகையான அபிஷேக பூஜைகள் நடந்தது. அதன்பின், சொர்ணபுரீஸ்வரர், வெள்ளிக் கவசம், புஷ்ப அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆத்தூர், தலைவாசல், வீரகனூர், கெங்கவல்லி, வாழப்பாடி, கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
* அதேபோல், ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வரர், கைலாசநாதர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், வீரகனூர் கங்கா சவுந்தரேஸ்வரர், வெங்கனூர் விருத்தாச்சலீஸ்வரர், ஏத்தாப்பூர் சாம்பவ மூர்த்தீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில், பிரதோஷ பூஜைகள் நடந்தது.