காரிமங்கலம்: காரிமங்கலம் அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் மலைக்கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி, நவ.11 மாலை, 5 மணிக்கு நந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்று பூஜைகள் நடந்தது. ஏற்பாடுகளை அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அன்பழகன், குருக்கள் பிரகாஷ் மற்றும் பலர் செய்திருந்தனர். * தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், நெசவாளர் நகர் மகாலிங்கேஸ்வரர் கோவில் ஆகியவற்றில் பிரதோஷத்தையொட்டி நவ.11 மாலை 5 மணிக்கு நந்திக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. * காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரர் மடம் வேதவள்ளி சமேத பெண்ணேஸ்வரர் கோவில் பிரதோஷ வழிபாடு நடந்தது. பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 5 மணிக்கு நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரம் பூஜைகள் நடந்தது. ஏற்பாடுகளை குருக்கள் மோகன்குமார் மற்றும் பலர் செய்திருந்தனர். * பாலக்கோடு பால்வண்ணநாதர், ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர் கோவில் ஆகியவற்றில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.