செஞ்சி:செஞ்சி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.செஞ்சி காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு பாலாபிஷேம் செய்தனர்.ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்தனர். நந்தீஸ்வரருக்கு அருகம்புல் மாலை அணிவித்தனர்.பெண்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். பூஜைகளை கிரிசங்கர் குருக்கள் செய்தார்.இதே போல் செஞ்சி அருணாச்சலேஸ்வரர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. திருப்பணிக்குழு தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.முக்குணம் முக்குன்ற நாத உடையார் கோவில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சாமி கோவில் உலா நடந்தது.