திருக்கோவிலூர் ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி மகோற்சவம்; வெண்ணெய்காப்பு அலங்காரத்தில் சுவாமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2024 06:07
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் சத்சங்கம் சார்பில் ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்று வரும் ராமநவமி விழாவை முன்னிட்டு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருக்கோவிலூர், கிழக்கு வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் 59ம் ஆண்டு ராமநவமி வசந்தோற்சவ விழா கடந்த 30ம் தேதி துவங்கியது. விழாவை முன்னிட்டு தினசரி காலை சுவாமிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், மாலை 6:00 மணிக்கு அர்ச்சனை, 7:30 மணிக்கு பரனூர் கிருஷ்ணபிரேமி சுவாமிகளின் குமாரர் ஸ்ரீ ஹரி உபன்யாசம் நடக்கிறது. விழாவில் சுவாமி வெண்ணெய்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 6ம் தேதி மாலை 6:00 மணிக்கு சீதா, லஷ்மண, அனுமந்த சமேத ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சுவாமிகள் ஆஞ்சநேயர் கோவிலில் எழுந்தருளி, திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை சத்சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.