ஆனி வெள்ளி; பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2024 01:07
கோவை; ஆனி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் இருக்கும் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. விழாவில் தீப ஒளியில் புஷ்ப அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.