குனியமுத்தூர் சக்தி மாரியம்மன் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2024 01:07
கோவை; குனியமுத்தூர் அருகே உள்ள சுகுணாபுரம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஆனி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவர் அம்மனுக்கு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் செந்நிற ஆடையில் வெள்ளி காப்பு கவசத்தில் பக்தர்களுக்கு அம்மன் காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சக்தி மாரியம்மனை தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.