தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூலை 2024 11:07
இளையான்குடி; இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.வருகிற ஆக.22ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி மாதம் பொங்கல் விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் போது தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.இந்நிலையில் கடந்த சில வருடங்களாக கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது வருகிற ஆக.22ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.இதற்காக நேற்று கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழாவிற்காக காலை 8:15 மணிக்கு அர்ச்சகர்கள் முகூர்த்த காலிற்கு சிறப்பு அபிஷேக ,ஆராதனைகள் நடைபெற்ற பின்னர் கிராம மக்கள் முகூர்த்த காலுடன் ஊர்வலமாக கோயிலை சுற்றி வலம் வந்து கோயிலுக்கு முன்பாக உள்ள திடலில் முகூர்த்த காலை ஊன்றினர். இதனைத் தொடர்ந்து முத்துமாரி அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.விழாவில் பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன், கண்ணமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் தமிழரசன்,தாயமங்கலம் அய்யாச்சாமி மற்றும் கோயில் பணியாளர்கள், கிராம முக்கியஸ்தர்கள்,தாயமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.