கோவை; மேட்டுப்பாளையம் ரோடு வடகோவை ஐயப்ப சுவாமி கோவில் பிரதிஷ்டை தினவிழா நடந்தது. இதில் முதல் நிகழ்வாக காலை 5 மணி அளவில் கணபதி ஹோமம் நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை 7 மணிக்கு உஷ பூஜை,, 8 மணி அளவில் அஷ்டபிஷேகம் மற்றும் பஞ்ச கவ்ய அபிஷேகங்கள் நடந்தன. காலை 9 மணி அளவில் மூலவர் சுவாமி ஐயப்பனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. இதில் சுவாமி ஐயப்பன் விளக்கின் ஒளியில் தீபஜோதியாய் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி ஐயப்பனை சரணகோஷ முழங்கி வழிபட்டனர்.