சித்துார்; ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், சித்துார் கிராமத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப்பெருமாள் கோவில் உள்ளது. கோவிலை புதுப்பிக்கும் பணிகள் நிறைவு பெற்று, மஹா கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமரிசையாக நடந்தது. இந்த விழாவை முன்னிட்டு, நேற்று காலை 10:00 மணி அளவில், மஹாசுதர் நடன ஹோமத்துடன் துவங்கியது. இன்று காலை 5:00 மணிக்கு கோ பூஜையுடன், 7:00 மணிக்கு கலச புறப்பாடு நடைபெற்றது. அதை தொடர்ந்து, வெங்கடேசப் பெருமாளுக்கு மஹா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.