Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் ஆனி ... கோதண்ட ராமசுவாமி கோயிலில் பிரம்மோற்ஸவ விழா திருக்கல்யாணம் கோதண்ட ராமசுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில் குவிந்த பக்தர்கள்; காத்திருந்து தரிசனம்
எழுத்தின் அளவு:
மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில் குவிந்த பக்தர்கள்; காத்திருந்து தரிசனம்

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2024
12:07

மைசூரு; ஆஷாடா கன்னட மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையை ஒட்டி, மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில் நேற்று ஏராளமான பக்தர்கள், 3 முதல் 4 மணி நேரம் காத்திருந்து, அம்மனை தரிசனம் செய்தனர்.

கர்நாடகாவில் ஆஷாடா கன்னட மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் மிகவும் விசேஷம். அதுவும் ஆஷாடா மாதத்தின் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் மைசூரு சாமுண்டிஸ்வரி கோவிலில் சிறப்பு வழிபாடு நடக்கும். இந்த வகையில், இந்தாண்டின் ஆஷாடா மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமையான நேற்று, சாமுண்டீஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவில் வளாகம் முழுதும் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கருவூலத்தின் நுழைவு பகுதியில், ‘அம்மா’ என்று மலர்களால் வடிவமைக்கப்பட்டிருந்தது. கோவில் கோபுரம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அம்மனுக்கு அதிகாலையே அபிஷேகம் செய்யப்பட்டு, நீல வண்ண பட்டுப்புடவை உடுத்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலை முதல், இரவு வரை பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். சாமுண்டி மலை அடி வாரத்திலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டன. லலித் மஹால் ஹெலிபேட் பகுதியில் இருந்து, மலை உச்சிக்கு செல்வதற்கு இலவச பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது. அம்மனை தரிசிக்க நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். 3 மணி முதல் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர். நீண்ட வரிசையில் நிற்க முடியாதவர்கள், 100, 300 ரூபாய் கட்டணம் செலுத்தி சிறப்பு தரிசனம் செய்தனர். அவர்களும் 2 மணி நேரம் காத்திருந்தனர். எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. அசம்பாவித சம்பவங்கள் நடக்காதவாறு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி இன்று நவதானிய அலங்காரத்தில் வராஹி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar