Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தர்காவில் தீமிதி திருவிழா இந்து, ... மொஹரம் பண்டிகை; 10 நாட்கள் விரதம் இருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய ஹிந்துக்கள் மொஹரம் பண்டிகை; 10 நாட்கள் விரதம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2024
12:07

பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனிப்பெருந்திருவிழாவில் இன்று அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழா பாதுகாப்பிற்கு 150 போலீசார் குவிக்கப்பட்டுள்ளர்.


பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழா ஜூலை 8 ல் கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் திருவிழா நடந்து வருகிறது. தினமும் இரவில் அம்மன் சிம்மம், ரிஷபம், அன்னபட்ஷி, குதிரை, யானை, மின் விளக்கு, பூப்பல்லாக்கு அலங்காரத்தில் வீதி உலா வந்து அருள் பாலித்தார். நேற்று முன்தினம் அம்மன் தென்கரை வணிகவைசிய குல அபிவிருத்தி சங்கத்தில் எழுந்தருளி, குதிரை வாகனத்தில் இரவில் வீதி உலா சென்றார்.நேற்று 9 ம் நாள் திருவிழாவில் நேற்று அதிகாலை 12:00 மணியிலிருந்து மதியம் 12:00 வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் முன்பு நடப்பட்ட கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி அம்மனை வழிபட்டனர். இதனை தொடர்ந்து மாவிளக்கு, ஆயிரம் கண்பானை, முளைப்பாரி எடுத்து அம்மனை வழிபட்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி எடுத்தனர். இதனையொட்டி பெரியகுளம் டி.எஸ்.பி., குரு வெங்கட் தலைமையில், 3 டி.எஸ்.பி., க்கள், 8 இன்ஸ்பெக்டர்கள், 41 எஸ்.ஐ., மற்றும் சிறப்பு எஸ்.ஐ., க்கள், 50 போலீசார், 52 ஊர்க்காவல் படையினர் நேற்று முதல் நாளை (ஜூலை 18) மாலை வரை 24 மணி நேரம் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருவிழா பகுதிகளில் குற்ற செயல்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று இந்திர விமானத்தில்  மீனாட்சி திக்குவிஜயம் செய்கிறாள். ... மேலும்
 
temple news
புதுச்சேரி: கொட்டுப்பாளையம் நாகாத்தம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம் நேற்று நடந்தது.புதுச்சேரி இ.சி.ஆர்., ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: பூவராகசுவாமி கோவிலில் தங்க கருட சேவை உற்சவம் நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவில் ... மேலும்
 
temple news
புவனகிரி: புவனகிரி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மன் ஜெயந்தி விழா, சங்காபிஷேகத் துடன் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் ரூ.4.50 கோடி மதிப்பில் தங்கத் தேர் செய்யும் பணியை விரைந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar