அரசாள வந்த அம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2024 11:07
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்களம் அரசாள வந்த அம்மன் கோயில் பால்குடம் மற்றும் பூச்சொரிதல் விழா ஜூலை 30 ல் நடக்கிறது. இதையடுத்து ஜூலை 22ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தினமும் இரவில் முலவர்களுக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று, அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது. விழாவின் தொடர்ச்சியாக, ஐந்தாம் நாளான நேற்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி பூஜை செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.