கூவம் திரிபுராந்தக சுவாமி கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2024 05:07
கூவம்; கடம்பத்துார் ஒன்றியம் கூவம் ஊராட்சியில் திரிபுர சுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தக சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அமைந்துள்ள திரிபுர சுந்தரி அம்பாளுக்கு ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை 9:00 மணிக்கு கோவில் வளாகத்தில் கொடி எடுத்து வரப்பட்டு, யாகசாலை மண்டபத்தில் புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, 9:45 மணிக்கு கொடியேற்றப்பட்டது. இதில், கூவம் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தினமும் காலை 7:00 மணிக்கு லட்சுமி, சரஸ்வதி, துர்கா சுவாமிகள் பவழக்கால் சப்பரத்திலும், இரவு 7:00 மணிக்கு திரிபுரசுந்தரி அம்பாள் பல்வேறு வாகனங்களிலும் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், வரும் 4ம் தேதி காலை 8:00 – 9:00 மணிக்குள் நடைபெறும். வரும் 8ம் தேதி திருக்கல்யான வைபவம் நடைபெறும் என, ஹிந்து அறநிலைய துறையினர் தெரிவித்துள்ளனர்.