Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news இனிப்பு பதார்த்தங்களால் அம்மனுக்கு ... யாகத்தை பார்த்தாலே புண்ணியம் ஆடி அமாவாசை வழிபாட்டில் அறிவுரை யாகத்தை பார்த்தாலே புண்ணியம் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி அமாவாசை; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
ஆடி அமாவாசை; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

04 ஆக
2024
11:08

அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஸ்வாமி தரிசனம் செய்ய பல மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவிநாசியில் ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் பாடல் பெற்ற தலமாகும். ஆடி அமாவாசையை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. அமாவாசை நாளை முன்னிட்டு சிவாலயத்தில் பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் மற்றும் தோஷங்களை கழிக்க வந்திருந்தனர். இதனையடுத்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் வரிசையில் நின்று வருவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. காலை முதல் மாலை வரை கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டத்தினால் நிரம்பி வழிந்து காட்சியளித்தது. அதில் ஒரு சிலர் பக்தர்கள் கோவில் ராஜகோபுர நுழைவாயில் முன்பாகவும், தீபஸ்தம்பத்தின் அருகிலும் தங்களது செருப்புகளை கழட்டி விட்டு சென்றனர். இதனால், கோவில் வெளி பிரகாரம் முழுவதுமாக ஆங்காங்கே செருப்புகள் சிதறி அலங்கோலமாக காட்சியளித்தது. இதனால், ஸ்வாமி தரிசனம் செய்ய வந்த பலரும் மனம் வருந்தினர்.

பக்தர்கள் கூறும்போது, செருப்புகள் மற்றும் பொருட்கள் பாதுகாப்பாக வைப்பதற்கு என தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது . கோவில் ஊழியர்கள் ஸ்வாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் தங்களது செருப்புகளை உரிய அறையில் விட்டு டோக்கன் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் கோவில் வளாகம் தூய்மையாகவும் தெய்வீகமாகவும் காட்சியளிக்கும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar