Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடியில் அதிசயம்.. பால் குடித்த ...  அயோத்யா மண்டபத்தில் ப்ரேமிக ஜெயந்தி மகோற்சவம் அயோத்யா மண்டபத்தில் ப்ரேமிக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருமாளை 12 வருடம் மாட்டுக்கொட்டகையில் அடைத்து வைத்த கும்பல்; விற்க முயன்ற போது சிக்கினர்
எழுத்தின் அளவு:
பெருமாளை 12 வருடம் மாட்டுக்கொட்டகையில்  அடைத்து வைத்த கும்பல்; விற்க முயன்ற போது சிக்கினர்

பதிவு செய்த நாள்

10 ஆக
2024
10:08

தஞ்சாவூர்: தஞ்சையில், ரூ.2 கோடி ரூபாய்க்கு பழங்கால பெருமாள் சிலையை விலை பேசி விற்க முயற்சித்த கும்பல் சிக்கியது. தஞ்சாவூர், திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பழங்கால சிலையை கடத்தி செல்ல முயல்வதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையறிந்து போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே மேலதிருவிழாபட்டியில், ஒரு கார் ஒன்றும், இரண்டு பைக்கும் சந்தேகத்திற்கிடமாக நின்றுக்கொண்டு இருந்தது. போலீசார் சோதனை செய்தனர்.


அதில் இருந்த சென்னை, அரும்பாக்கம், ஜெகநாதன் நகரை ராஜேந்திரன்,52,. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அலமங்குறிச்சியை சேர்ந்த ராஜ்குமார்,36, திருவாரூர் மாவட்டம் இனாம்கிளியூரை சேர்ந்த தினேஷ்,28, ஜெய்சங்கர், 58, கடலுார் மாவட்டம் நாட்டார்மங்கலம் பகுதியை சேர்ந்த விஜய், 28, ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பழங்கால 2.5 அடி உயர உலோகப் பெருமாள் சிலையை கைப்பற்றினர். தொடர்ந்து விசாரணையில், இனாம்கிளியூரை சேர்ந்த தினேஷ் தந்தை 12 ஆண்டுகளுக்கு முன் தொழுவூர் ஆற்றில் துார்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிலை கிடைத்துள்ளது. வருவாய் துறையினரிடம் தகவல் அளிக்காமல், மாட்டு கொட்டகையில் மறைத்து வைத்து இருந்துள்ளார். தினேஷ் அவரது தந்தைக்கு பிறகு மாட்டுகொட்டகையில் மறைத்து வைத்து இருந்த சிலையை கண்டெடுத்தார். அவரும், வருவாய்துறையினரிடம் தெரிவிக்காமல், இரண்டு கோடி ரூபாய் விற்பனைக்கு செய்ய வேண்டும் என முயன்றுள்ளார். நண்பர்கள் மூலம் சென்னையை சேர்ந்த ராஜேந்திரன் உதவியை நாடியுள்ளார். நண்பர்களான ராஜ்குமார், ஜெயசங்கர், விஜய் ஆகியோருடன், திருவிடைமருதுாரை சேர்ந்த ஹாரிஸ்,26, கண்டமங்கலம் அஜித்குமார், 26. ஆகியோரை பாதுகாப்புக்கு அழைத்துக்கொண்டு சிலையை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். சிலை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சிலையானது 15 முதல் 16ம் நுாற்றாண்டு சோழர்கள் காலத்தை சேர்ந்தது என தெரியவந்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar