Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சோளிங்கரில் கோவிலில் மஹாராஷ்டிர ... லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆடி மாத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நிறை புத்தரிசி பூஜைகளுக்காக சபரிமலையில் நடை திறப்பு
எழுத்தின் அளவு:
 நிறை புத்தரிசி பூஜைகளுக்காக சபரிமலையில் நடை திறப்பு

பதிவு செய்த நாள்

11 ஆக
2024
10:08

சபரிமலை; நிறைப்புத்தரிசி பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறந்தது. நாளை காலை தந்திரி மகேஷ் மோகனரரு தலைமையில் நிறைப்புத்தரிசி பூஜை நடைபெறும்.

எல்லா ஆடி மாதத்திலும் சபரிமலையில் நிறைப்புத்தரிசி பூஜை நடைபெறுகிறது. திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு சொந்தமான பாலக்காடு மற்றும் அச்சன் கோயில் வயல்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்கதிர்களை அறுவடை செய்து பவனியாக சபரிமலை கொண்டு வந்து ஐயப்பனுக்கு நிறைப்புத்தரிசி பூஜை நடைபெறுகிறது. இதற்காக இன்று மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து நெற்கதிர்கள் சன்னிதானத்திற்கு கொண்டுவரப்பட்டது. வேறு விசேஷ பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்பட்ட பின்னர் நிறைப்புத்தரிசி பூஜை சடங்குகள் தொடங்கும். மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நெற்கதிர்களை தலையில் சுமந்து கோயிலை வலம் வந்து ஸ்ரீ கோயிலுக்குள் கொண்டு செல்வார். அங்கு நெற்கதிர்களுக்கு தந்திரி மகேஷ் மோகனரரு பூஜைகள் நடத்துவார். பின்னர் அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். தொடர்ந்து வழக்கமான உஷ பூஜை, களபாபிசேகம், உச்ச பூஜை , படி பூஜை, அத்தாழபூஜை நடைபெறும். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar