Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆ.தெக்கூர் சிவன் கோயிலில் ஆடி ... 61 அடி உயர வெள்ளை முனியப்பன் சுவாமி திருவுருவ சிலை கண் திறப்பு விழா 61 அடி உயர வெள்ளை முனியப்பன் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செம்மலைநாதர் கோவிலில் அறிய தகவலுடன் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
செம்மலைநாதர் கோவிலில் அறிய தகவலுடன் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

13 ஆக
2024
05:08

தஞ்சாவூர், நாகை மாவட்டம் கீழையூர் செம்மலைநாதர் என்கிற அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சேர்ந்த வரலாற்றை அறிந்துக்கொள்ள விரும்பிய அரசுப் பள்ளி ஆசிரியர் கண்ணன், ஓய்வு பெற்ற டி,ஆர்,ஓ, முகமதுஆரிபு உள்ளிட்ட கிராம மக்கள், தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நுாலக தமிழ்ப் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணிமாறனிடம் தெரிவித்தனர். 


இதன்பேரில், மணிமாறன், பொந்தியாகுளம் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர்  தில்லை கோவிந்தராஜன், சக்கராப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஜெயலெட்சுமி ஆகியோர் நேரில் அவ்வூருக்குச் சென்று கள ஆய்வு செய்தனர்.

 

இது குறித்து மணிமாறன் கூறியதாவது: செம்மலைநாதர் கோவிலில் உள்ள சிற்பங்கள், கட்டுமானங்கள் சோழர் காலத்தை சார்ந்துள்ளது. சோழர்கள் காலத்தில் முக்கியத்துவம் பெற்ற கோவிலாக  திகழ்ந்துள்ளது. பிறகு பாண்டியர் காலத்திலும் கோவில் புதுப்பிக்க பெற்று அம்மனுக்கு சிறு கோவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நாயக்க மற்றும் மராட்டிய மன்னர்களால் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது.  கோவில் கருவறைக்கு முன்பு முக மண்டபத்தின் வடபுறத்தில் துவங்கி கருவறையின் பின்புறம், கோவிலின் தென்புறச் சுவர் முழுவதுமாக கல்வெட்டுகள் நிறைந்துள்ளது. இக்கல்வெட்டு செய்திகள் பதிவு செய்யப்படாமலும், வெளியுலகம் அறிந்து கொள்ள முடியாமலும் இதுநாள் வரை இருந்துள்ளது.  இதில், கருவறைக்கு முன் உள்ள மண்டபத்து துாணில், முதலாம் ராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்தி குறித்த பழமையான கல்வெட்டு உள்ளது. வெளிப்புறச் சுவற்றில் திரிபுவன சக்கரவர்த்திகள், இரண்டாம் ராஜராஜன், ராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன், பராக்கிரம பாண்டியன் போன்றோரின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ராஜராஜ சோழ வளநாட்டு, அளநாட்டு பிரம்மதேசம், ஸ்ரீ ராஜராஜ சதுர்வேதிமங்கலம் என இவ்வூர் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளது.  இக்கோவில் இறைவன் பெயர் ஸ்ரீ சிவபாத ஈஸ்வரமுடையார் என்றும், இவ்வூரின் மையத்தில் உள்ள விஷ்ணு கோவில் ஜலசயன பெருமாள் கோவில் என்றும் அழைக்கப்பெற்றுள்ளது.  திருப்பள்ளி எழுச்சி, திருக்கார்த்திகை திருவிழா, அமுது படையலுக்கு நிலதானம், அதன் எல்லைகள் குறிக்கப்பட்டுள்ளது.  ஆயிரம் ஆண்டு பழமை மிக்க சிவாலயத்தின் சிறப்பினையும், அவ்வூரின் வரலாற்றினையும் முழுமையாக அறிய இங்குள்ள கல்வெட்டுகளைப் படி எடுத்தால் பல வரலாற்று  செய்திகள் கிடைக்கும் இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; குருந்தமலை முருகன் கோவிலில் மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையம் மகா சங்கரா மினி ஹாலில் அனுஷ நட்சத்திர மஹோத்சவம் ... மேலும்
 
temple news
உசிலம்பட்டி; மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மலைப்பட்டி கிராமத்தில் பெரும்பாலான மக்கள் ... மேலும்
 
temple news
சிதம்பரம்; சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோயிலில், நடராஜருக்கும் சிவகாமசுந்தரிக்கும் தங்கத்தால் ... மேலும்
 
temple news
காரியாபட்டி; காரியாபட்டி முடுக்கன்குளத்தில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar