ஆயக்குடி; பழநி, அருகே மஞ்சநாயக்கன்பட்டி உச்சிமாகாளி அம்மன் கோயில் 18வது ஆண்டு விழா அபிஷேக விழா நடைபெற்றது. பழநி அருகே மஞ்சநாயக்கன்பட்டியில் உச்சி மாகாளியம்மன் ஆலய 18வது ஆண்டு விழா, பால் அபிஷேக விழா நடைபெற்றது. இதில் கூனம்பட்டி ஆதீனம் நடராஜசுவாமிகள் தலைமை வகித்தார். வேணுகோபாலசாமி திருக்கோவிலில் இருந்து 1008 பால் குடங்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். உச்சிமாகாளியம்மனுக்கு சிறப்பு மகா அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.