Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உச்சி மாகாளியம்மன் கோவிலில் ... கோவில், வீடுகளில் வரலட்சுமி விரத பூஜை : பெண்கள் வழிபாடு கோவில், வீடுகளில் வரலட்சுமி விரத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் வரலட்சுமி விரத பூஜை கோலாகலம்
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் வரலட்சுமி விரத பூஜை கோலாகலம்

பதிவு செய்த நாள்

16 ஆக
2024
05:08

காளஹஸ்தி; காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் (வெள்ளிக்கிழமை) இன்று வரலட்சுமி விரத பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக இதற்கான பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் கோயில் செயல் அலுவலர் மூர்த்தி தலைமையில் தேவஸ்தான அதிகாரிகள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர் . கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு (சிராவன லட்சுமி)  வரலட்சுமி விரதப் பூஜையை சிறப்பாக நடத்த  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்த விரதப் பூஜை எவ்வித சிரமமும் இல்லாமல் பக்தி சிரத்தையுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கடந்த ஆண்டுகளில் சிவன்  கோயில் துணை கோயிலான பிரசன்ன வரதராஜ சுவாமி கோவில் வளாகத்தில் ஆண்டுதோறும்  (கூட்டு) வரலட்சுமி விரதம் நடைபெற்று வந்தது . ஆனால் தற்போது பிரசன்ன வரதராஜப் பெருமாள் கோயில் புனரமைப்பு பணிகள் நடந்து வருவதால், இந்தாண்டு சிவன் கோவில் அருகே உள்ள பிரம்மக் கோயில் வளாகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டதாக கோயில் செயல் அலுவலர் மூர்த்தி தெரிவித்தார். கடந்த காலத்தில் காஞ்சி காமகோடி மடாதிபதிகள் இப்பகுதியை புனிதப் படுத்துவதற்காக இங்கு பலமுறை சதுர்மாச விரதங்களை மேற்கொண்டனர்.


பிரம்ம கோயிலில் வரலக்ஷ்மி விரதப் பூஜையில் ஈடுபட்டவர்களுக்கு கோயிலில் ஞானப்பிரசுனாம்பிகை அம்மனை தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஸ்ரீ காளஹஸ்தி  சட்டமன்ற உறுப்பினர் சுதிர் ரெட்டி உத்தரவின் பேரில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார்   5 ஆயிரம் பெண் பக்தர்கள் வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் பூஜைகள் தொடங்கி மாலை வரை தொடர்ந்து நடைபெற்றது. மேலும் பெண் பக்தர்கள் காத்திருக்க பிரத்யேக நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.  இந்த விரதப் பூஜையில் ஈடுபட்டவர்களுக்கு தாம்பூலம் ( மஞ்சள் , குங்குமம் வெற்றிலை, பாக்கு, வளையல்கள், பூ , பழம்) கோயில் சார்பில் வழங்கப்பட்டன.  

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி வைபவம் பகல் பத்து உற்சவத்தின் 6 ம் நாளில் ... மேலும்
 
temple news
அன்னூர்; அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில், இன்று கொடியேற்றம் நடந்தது.பழமையான, அன்னூர் ... மேலும்
 
temple news
ஆரியன்காவு: கேரள மாநிலம் ஆரியங்காவு தர்மசாஸ்தா, புஷ்கலா தேவி திருக்கல்யாணத்தை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
டில்லி, கதீட்ரல் தேவாலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் பிரதமர் மோடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar