Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரியில் கனமழையால் ... ராமேஸ்வரம் கோயில் ராமர் தீர்த்தம் பாசி படர்ந்து அசுத்தம்: பக்தர்கள் அவதி ராமேஸ்வரம் கோயில் ராமர் தீர்த்தம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா; ஆக.,29ல் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா; ஆக.,29ல் கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

17 ஆக
2024
11:08

சிவகங்கை; சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா ஆக., 29 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. குைடவரை கோயில் என்ற சிறப்பு பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் ஆக., 29 காலை கொடியேற்றத்துடன் சதுர்த்தி விழா துவங்குகிறது. இரவு 8:30 மணிக்கு விநாயகர் மூஷிக வாகனத்தில் வீதி உலா வருவார். சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆக., 30 முதல் செப்., 5 வரை தினமும் காலையில் வெள்ளி கேடகத்தில் விநாயகர் வீதி உலா வருவார். ஒவ்வொரு நாளும் இரவு 8:30 மணிக்கு விநாயகர் சிம்ம, பூத, கமல, ரிஷப, மயில், குதிரை, யானை உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வருவார். செப்.,3 மாலை 4:00 மணிக்கு கோயிலில் கஜமுக சூரசம்ஹாரம் நடைபெறும்.


செப்., 6ல் தேரோட்டம்: விழாவை முன்னிட்டு ஒன்பதாம் திருநாளான செப்., 6 காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர் எழுந்தருள்வார். சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெறும். மாலை 5:00 மணிக்கு சதுர்த்தி விழா தேரோட்டம் நடைபெறும். மாலை 4:30 முதல் இரவு 10:00 மணி வரை மூலஸ்தானத்தில் விநாயகர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி அளிப்பார். செப்.,7 ல் முக்குறுணி மோதக படையல்: விழாவின் பத்தாம் நாளான விநாயகர் சதுர்த்தி அன்று, விநாயகருக்கு காலையில் இருந்து சிறப்பு அபிேஷக ஆராதனை, முக்குறுணி மோதக படையல், தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். இரவு 11:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடுடன் விழா நிறைவு பெறும். திருவிழா காலங்களில் கோயிலில் திருமுறை பாராயணம், மாலையில் நாதஸ்வர கச்சேரி, கலைநிகழ்ச்சி, மெல்லிசை, பரதநாட்டியம் நடைபெறும். பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி மெய்யப்ப செட்டியார், பூலாங்குறிச்சி முத்துராமன் செட்டியார் தலைமையில் விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவோணம் பெருமாள் வழிபாட்டிற்கான சிறந்த நாள். திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விரதமிருந்து ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆனி மாதம் திருவோண விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சபரிமலை; நவக்கிரக பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. நாளை காலை 11:30 மணிக்கு நவக்கிரக ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு யாக பூஜை நடைபெற்றது. பழநி, ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முத்தியால்பேட்டை, லட்சுமி ஹயக்ரீவர் கோவில் பவித்ரோற்சவப் பூர்த்தி இன்று நடக்கிறது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar