Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோயில்களில் பவுர்ணமி பூஜை ; ... ஆவணி பவுர்ணமி; திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் விளக்கேற்றி வழிபாடு ஆவணி பவுர்ணமி; திருச்செந்தூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை திருப்பதி பிரம்மோற்சவம் அக்டோபர் 4ல் துவங்குகிறது
எழுத்தின் அளவு:
திருமலை திருப்பதி பிரம்மோற்சவம் அக்டோபர் 4ல் துவங்குகிறது

பதிவு செய்த நாள்

20 ஆக
2024
08:08

திருமலை திருப்பதியில் ஆண்டு முழுவதும் 450 விழாக்கள் நடக்கின்றன அவற்றுள் சிகரம் வைத்தது போல நடப்பது பிரம்மோற்சவ விழாவாகும்.

இறைவனே நடத்துவதாக  கருதப்படும் இந்த விழாவைக்காண பக்தர்கள் நாட்டின் பல பகுதிகளில்  இருந்தும் வருவர், அதிலும்  கருட வாகனத்தன்று  திருமலையே கொள்ளாத அளவிற்கு பல  லட்சம் பக்தர்கள் திரள்வர்.

இந்த வருடம் அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி துவங்கி 12 ஆம் தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.

04/10/2024 மாலை 5:45 மணியளவில் கொடியேற்றம்: இரவு 9 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில்  சுவாமி உலா

05/10/2024 காலை 8 மணி சின்ன சேஷ வாகனத்தில் சுவாமி உலா: இரவு 7 மணிக்கு ஹம்ச வாகனம்

06/10/2024 காலை 8 மணி சிம்ம வாகனம்: இரவு 7 மணி முத்துப்பந்தல் வாகனம்

07/10/2024 காலை 8 மணி கற்பகவிருட்ச வாகனம்: இரவு 7 சர்வபூபாள வாகனம்

08/10/2024 காலை 8 மணி மோகினி அவதாரம்: இரவு 6:30 மணி கருட வாகனம்

09/10/2024 காலை 8 மணி ஹனுமந்த வாகனம்:மாலை 4 மணி தங்க ரதம்: இரவு 7 மணி யானை வாகனம்

10/10/2024 காலை 8 மணி சூர்ய பிரபை வாகனம்: இரவு 7 மணி  சந்திர பிரபை வாகனம்

11/10/2024 காலை 7 மணி தேரோட்டம்:இரவு 7 மணி குதிரை வாகனம்

12/10/2024 காலை 6 மணி சக்ர ஸ்நானம்: இரவு 8:30 மணி கொடியிறக்கம்

காலை  இரவு வேளைகளில் சுவாமி சன்னதி தெருவில் வாகனத்தில் வலம் வரும் போது பல்வேறு மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.திருவிழா நாட்களில் மூலவர் தரிசனம் என்பது ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கே சிரமமாக இருக்கும், தர்மதரிசனத்திற்கு செல்பவர்கள் நீண்ட நேரம் வரை காத்திருக்கவேண்டியிருக்கும்.

08 ஆம் தேதி நடைபெறும் மோகினி அவதாரத்தின் போது,மோகினி அவதாரத்தில் வரும் மலையப்பசுவாமியானவர் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த  மாலையை அணிந்து வருவார் என்பது விசேஷம், இதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பாகவே ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து மாலை சென்றடையும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான ... மேலும்
 
temple news
சென்னை; மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியில் கோவில் புரட்டாசி  10 நாள் திரு விழா - கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்பதி; கொடி இறக்கத்துடன்  ஸ்ரீவாரி சாளக்கட்ட பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.திருப்பதி ஏழுமலையான் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி மண்டலத்தில் வேடாம் கிராமத்தில் வீற்றிருக்கும் தட்சிண ... மேலும்
 
temple news
திருவொற்றியூர் ; திருவொற்றியூரில் அமைந்துள்ள  ஓம் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவிலில் 501 பெண்கள் பால் குடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar