Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனந்தக்கோன் காலத்து கல்வெட்டு ... திருவண்ணாமலையில் விடிய, விடிய கிரிவலம் சென்ற பக்தர்கள் திருவண்ணாமலையில் விடிய, விடிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா; அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை
எழுத்தின் அளவு:
தாயமங்கலம் முத்துமாரியம்மன்  கோயில் கும்பாபிஷேக விழா; அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை

பதிவு செய்த நாள்

20 ஆக
2024
11:08

இளையான்குடி; இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் வருகிற ஆகஸ்ட் 22ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு நேற்று காலை கணபதி ஹோமம், கோ பூஜை அதனைத் தொடர்ந்து மாலை யாகசாலை பூஜைகள் துவங்கியது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள புகழ்பெற்ற முத்து மாரியம்மன் கோயிலில் வருடம் தோறும் பங்குனி மாதம் தொடர்ந்து 10நாட்கள் பொங்கல் விழா நடைபெறும்.இந்த விழா நாட்களின் போது தமிழகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் வந்து வேண்டுதல்களை நிறைவேற்றி ஆடு கோழிகளை பலியிட்டு அம்மனை வேண்டி சென்று வருகின்றனர். இந்நிலையில் இக்கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக கடந்த சில வருடங்களாக பணிகள் நடைபெற்று வந்து முடிவுற்றதை தொடர்ந்து வருகிற ஆக. 22ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக கோயில் முன்பாக யாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று காலை கோயில் வளாகத்தில் கணபதி ஹோமத்துடன் பூஜைகள் ஆரம்பமாகின.


இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள்,பூஜைகள் நடைபெற்றது பின்னர் கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு வகையான பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. மாலை 6:45 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து 3 நாள்கள் 6 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிற 22ம் தேதி காலை 8:00மணியிலிருந்து 9:15 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. பின்னர் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள், அன்னதானம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன், விழா கமிட்டியினர், கோயில் பணியாளர்கள், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி வைபவம் பகல் பத்து உற்சவத்தின் 6 ம் நாளில் ... மேலும்
 
temple news
அன்னூர்; அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில், இன்று கொடியேற்றம் நடந்தது.பழமையான, அன்னூர் ... மேலும்
 
temple news
ஆரியன்காவு: கேரள மாநிலம் ஆரியங்காவு தர்மசாஸ்தா, புஷ்கலா தேவி திருக்கல்யாணத்தை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
டில்லி, கதீட்ரல் தேவாலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் பிரதமர் மோடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar