Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குமுளி வழியாக செல்லும் அய்யப்ப ... கோவில்களில் பிளாஸ்டிக் தடை: அமலுக்கு வருவது எப்போது? கோவில்களில் பிளாஸ்டிக் தடை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் தரிசனத்திற்கு 16 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 நவ
2012
10:11

நகரி: திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், 1.30 லட்சம் பக்தர்கள், சாமி தரிசனம் செய்தனர்.நேற்று இரவு நிலவரப்படி, மேலும், 50 ஆயிரம் பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர். இரவு நேரத்தில் நிலவும் பனி மற்றும் குளிர் காற்றையும் பொருட்படுத்தாமல், பல ஆயிரம் பக்தர்கள், சாமி தரிசனத்திற்காக, வரிசையில் காத்து இருக்கின்றனர். கியூ காம்ப்ளக்சின், 31 வளாகங்களும், நிரம்பியுள்ள நிலையில், கோவிலுக்கு வெளியேயும், இலவச தரிசன வரிசை நீண்ட தூரம் நின்றிருந்தது. பாத யாத்திரையாக வரும் பக்தர்கள், சாமி தரிசனம் செய்ய, ஐந்து மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.இலவச தரிசனத்திற்கு, 16 மணி நேரமாகிறது; 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசனத்திற்கு, ஐந்து மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும் என, தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகளுக்கும், பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், விடுதி கிடைக்காத பக்தர்கள், சாலை ஓரங்களில் ஓய்வு எடுத்து வருகின்றனர். திருமலை கோவில் உண்டியலில், பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம், நேற்று முன் தினம் மட்டும், ஒரு நாள் வசூலாக, 2.26 கோடி ரூபாய் வருமானம் கிடைத்து உள்ளதாக, தேவஸ்தான போர்டின் சேர்மன் பாபிராஜ,ú தெரிவித்தார்.வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு, பெங்களூருவை சேர்ந்த, கமல்கெடியா குடும்பத்தினர், ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை, தேவஸ்தான போர்டு சேர்மனிடம், நேற்று முன் தினம் நன்கொடையாக வழங்கினர். இத்தொகையை, நித்ய அன்னதான திட்டத்திற்கு, டிபாசிட் செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கரிங்கரைப்புள்ளி காடாங்கோடு பகவதி அம்மன் கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; அஷ்டமி பூப்பிரதட்சனம் யொட்டி ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், உலக சாதனை முயற்சியாக, 900க்கும் மேற்பட்ட நாட்டிய ... மேலும்
 
temple news
கூடலுார்; கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருவிழா வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை சாரல் மலையில் சாலைகளில் பாதுகாப்புக்கு இன்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar