Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ... 350 ஆண்டு பழமையான கல்வெட்டு திருவண்ணாமலை அருகே கண்டெடுப்பு 350 ஆண்டு பழமையான கல்வெட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

29 ஆக
2024
12:08

ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.


ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மூலவர் மீது, பகல் முழுவதும் சூரிய ஒளி படும் வகையில் கருவறை அமைய பெற்றுள்ளதால், இந்த விநாயகர் வெயில் உகந்த விநாயகர் என அழைக்கப்படுகிறார். இக்கோயிலில் ஆண்டு தோறும் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறுகின்றன. இந்த நிலையில், இன்று காலை 9:45 மணிக்கு கோயில் கொடி மரத்தில் விழா கொடியேற்றப்பட்டு, சதுர்த்தி விழா துவங்கியது. முன்னதாக, மூலவர் மற்றும் கொடி மரத்திற்கு சிவாச்சாரியார்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கொடியேற்றத்தை தொடர்ந்து இன்று மாலை 6:30 மணிக்கு விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். விழாவின் தொடர்ச்சியாக, தினமும் மாலையில் கேடகம், சிம்மம், மயில், யானை, ரிஷபம், காமதேனு, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் வீதி ஊர்வலம் நடைபெறுகிறது. விழாவின் எட்டாம் நாளான செப்.5ல் சித்தி, புத்தி ஆகிய இரு தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. தென் தமிழகத்தில் இக்கோயில் மட்டுமே இரு தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெறுவதால் இந்நிகழ்வோம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். விழாவில் செப்.6 ல் தேரோட்டம் நடைபெற்று, செப். 7ல் முக்கிய விழாவான சதுர்த்தி தீர்த்தவாரி நடைபெற்று விழா நிறைவடைகிறது. நேற்று நடைபெற்ற கொடியேற்ற விழாவில், முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், முன்னாள் வீ.ஏ.ஓ., உப்பூர் கிருஷ்ணன், குமரைய்யா அம்பலம், கடலூர் முருகன் அம்பலம், ஊராட்சி மன்ற தலைவர் முருக வள்ளி, மோர்ப்பண்ணை முன்னாள் கிராமத் தலைவர் துரை.பாலன், முத்துமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; இந்தாண்டு சாதுர்மாஸ்ய விரதத்தை காஞ்சி மடாதிபதிகள்; ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்,  ... மேலும்
 
temple news
காரைக்கால் ; காரைக்கால் மாங்கனித்திருவிழா முன்னிட்டு காரைக்கால் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலையை பக்தர்கள் சிவனாக நினைத்து வழிபட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், ஜேஷ்டாபிஷேகம் செய்து, நம்பெருமாளுக்கு தைலக்காப்பு ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் புனித நீராடி, சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar