கோவில் சொந்துக்களை முறைகேடாக விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03செப் 2024 04:09
காரைக்கால்; காரைக்காலில் கோவில் சொந்துக்களை முறைகேடாக விற்பனை செய்த நபர்களை சி.பி.ஐ., விசாரணை செய்ய இந்து முன்னனி கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி சார்பில் கோவில் சொத்துக்களை முறைகேடாக விற்பனை செய்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் சி.பி.ஐ.,விசாரணை செய்ய வேண்டும் என்று நகர தலைவர் ராஜ்குமார் தலைமையில் கலெக்டர் மணிகண்டனை சந்திந்து புகார் மனு அளித்தனர்.இதில் காரைக்கால் மாவட்ட கோவில்பத்து ஸ்ரீபார்வதீஸ்வரர் கோவில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொத்துக்கள் முறைகேடாக விற்பனை செய்த அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், நில வணிகர்கள் என பலர் சம்மந்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கோவில் நிர்வாகம் அதிகாரியின் அலட்சியத்தினால் இந்த முறைகேடு நடந்துள்ளது.எனவே கோவில் நிர்வாக அதிகாரியை பணிநீக்கம் செய்ய வேண்டும்.மேலும் நில மோசடி சம்மந்தமாக சி.பி.ஐ.,விசாரணை நடைபெற்றால் தான் உண்மை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்து முன்னணி கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.