Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அருகே ராமச்சந்திர மூர்த்தி, ... விநாயகனே வினை தீர்ப்பவனே; வீடு கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் விநாயகனே வினை தீர்ப்பவனே; வீடு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி தீர்த்தவாரி கோலாகலம்
எழுத்தின் அளவு:
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில்  சதுர்த்தி தீர்த்தவாரி கோலாகலம்

பதிவு செய்த நாள்

07 செப்
2024
11:09

திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில், சதுர்த்தியை முன்னிட்டு இன்று தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடந்தது.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் பத்து நாள் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா ஆக.29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலையில் வெள்ளிக்கேடகத்தில் விநாயகர் புறப்பாடும், இரவில் வாகனங்களில் சுவாமி வீதி உலாவும் நடந்தது. நேற்று ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு காலை 9:00 மணிக்கு கற்பகவிநாயகரும், சண்டிகேஸ்வரரும் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து பக்தர்கள் தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை 4:50 மணிக்கு தேர் வடம் பிடித்து தேரோட்டம் துவங்கியது. பெண்கள்,சிறுவர்,சிறுமியர் உற்சாகமாக சண்டிகேஸ்வரர் தேர் வடம் பிடித்தனர். தேர்கள் கோயிலை வலம் வந்தன. ஏராளமான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து மூலவர் கற்பகவிநாயகர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்த அலங்காரம் நடைபெறும். இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாலை நடை திறந்து, பக்தர்கள் தரிசனம் துவங்கியது. கோயிலிலிருந்து காலை 9:30 மணி அளவில் உற்ஸவ விநாயகர்,ச ண்டிகேஸ்வரர் கோயில் தெற்கு படித்துறையில் எழுந்தருள்னர். தொடர்ந்து அங்குசத்தேவருக்கு படித்துறையில் அபிேஷக,ஆராதனைகள் நடந்து தீர்த்தவாரி நடைபெற்றது. மதியம் 1:30 மணி அளவில் மூலவருக்கு முக்கூருணி மோதகம் படையலிடப்படும். இரவு 11:00 மண அளவில் பஞ்சமூர்த்திகள் வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு வைகாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
மதுரை : சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை வந்த கள்ளழகர் பூப்பல்லக்கில் அழகர் கோவில் புறப்பட்டார். ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டுக்கான வைகாசி பிரம்மோத்சவம், கடந்த 11ம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி ரெணகாளிஅம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. பழநி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவாச்சாரியார்கள் சமூகம் சார்பில் மஞ்சள் நீர் உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar