Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவகாசி நாமத்வாரில் ராதா கல்யாண ... பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில்  சதுர்த்தி தீர்த்தவாரி கோலாகலம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அருகே ராமச்சந்திர மூர்த்தி, ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
காரமடை அருகே ராமச்சந்திர மூர்த்தி, ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

06 செப்
2024
06:09

மேட்டுப்பாளையம்; மருதூர் ஊராட்சியில் புதிதாக கட்டிய சீதா சமேத ராமச்சந்திர மூர்த்தி மற்றும் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

காரமடை அடுத்து மருதூர் ஊராட்சியில் உள்ள செல்லப்பனூரில், புதிதாக சீதா சமேத ராமச்சந்திர மூர்த்தி மற்றும் ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டது. வேலைபாடுகளுடன் கல்காரப் பணிகளும், கோபுரங்களில் சிலைகளும் கட்டப்பட்டுள்ளன. கல்கார கட்டட கோவில் சுவற்றில், கிருஷ்ணரின் மச்சம் அவதாரம், கூர்மம், வராக, நரசிம்ம, வாமண, பரசுராம், ராமர், பலராமர், கிருஷ்ணன், கல்கி ஆகிய 10 அவதாரங்களின் சுவாமி சிலைகள் இடம் பெற்றுள்ளன. கோவில் முன்பாக 11 அடி உயரமுள்ள அனுமன் சிலை வைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் விழா, கடந்த, 4ம் தேதி புண்யாஹவாசம், மகா சுதர்சன ஹோமத்துடன் துவங்கியது. மருதூர் ஜெய மங்கள ஆஞ்சநேயர் சன்னதியில் இருந்து, முளைபாளிகை, தீர்த்த குடங்கள் ஆகியவை சீதா ராமர் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். அங்கு மாலையில் சாற்றுமுறை, வாஸ்து சாந்தி ஆகிய பூஜைகள் நடந்தன.

ஐந்தாம் தேதி அக்னி பிரதிஷ்டையும், மூல மந்தர ஹோமம் உள்பட பல்வேறு ஹோமங்கள் நடந்தன. பின்பு பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று அதிகாலை தந்மூர்த்தி ஹோமம், யாத்ராதானம் ஆகியவை நடந்தன. காலை, 6:00 மணிக்கு திருவாராதனம், வேத திவ்ய பிரபந்தம் சாற்றுமுறை ஆகியவை சேவிக்கப்பட்டது. பின்பு யாக சாலையில் இருந்து, தீர்த்த கலசங்கள் புறப்பட்டு கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. முதலில் கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கும், பின்பு சீதா ராமச்சந்திர மூர்த்தி சுவாமி சிலைகள் மீது தீர்த்தம் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. தச தரிசனம் சற்று மறை, பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி திருக்குறுங்குடியை சேர்ந்த கிருஷ்ண ஐயங்கார் சுவாமி கும்பாபிஷேகம் செய்து வைத்தார். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு ஐந்தாம் தேதி மாலை பத்மஸ்ரீ விருது பெற்ற பத்திரப்பன் தலைமையில், ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் மற்றும் தோலம்பாளையம் மற்றும் தேக்கம்பட்டியை சேர்ந்த குழுவினரின் வள்ளி ஒயில் கும்மியாட்டம் நடந்தது. நேற்று கும்பாபிஷேகம் முடிந்தபின், ஹிந்து முன்னணி மாநில பேச்சாளர் மனோகரன் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். செல்லப்பனூர் மந்த்ராசலம், ஸ்ரீ சீதா ராமபாத சேவா அறக்கட்டளை நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் கவுரி விரத பூஜை செய்யப்படுகிறது. கவுரி விரதத்தில் சிவனையும், அம்மனையும் ... மேலும்
 
temple news
கோவை; கோவை மதுக்கரை பகுதியில் மலைமேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் ஆவணி கடைசி ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், பவித்ரோத்ஸவ விழா நடக்கிறது.ஸ்ரீ பாஞ்சராத்ர ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவில் திருத்தேரோட்டம் நிகழ்ச்சி நடந்தது.புதுச்சேரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆவணி ஞாயிறு உத்ஸவம் சுமங்கலி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar