Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஒவ்வொரு திதியில் நாம் எந்த கணபதியை ... எந்த மரத்தடி பிள்ளையார் என்ன வரம் தருவார்? எந்த மரத்தடி பிள்ளையார் என்ன வரம் ...
முதல் பக்கம் » துளிகள்
கணபதி என்றிட கலங்கும் வல்வினை; இந்த ராசிக்கு இந்த விநாயகர்!
எழுத்தின் அளவு:
கணபதி என்றிட கலங்கும் வல்வினை; இந்த ராசிக்கு இந்த விநாயகர்!

பதிவு செய்த நாள்

07 செப்
2024
12:09

 அனைவருக்கும் பிடித்த, எங்கும் தென்படும் வினை தீர்க்கும் விநாயகரை நாம் எளிதில் வழிபடும் வகையில், குளத்துக் கரை, தெருவோரம் என எங்கும் இருக்கிறார்.

கணபதி என்றிட கலங்கும் வல்வினை

கணபதி என்றிட காலனும் கைதொழும்

கணபதி என்றிட கருமம் ஆதலால்

கணபதி என்றிட கவலை தீருமே

கணபதியை வணங்கினால் அனைத்து துன்பங்களையும் விலக்கி, வாழ்வுக்கு ஒளியேற்றுவார் என்பது அனைவரின் நம்பிக்கை. பல்வேறு பெயர்களில் அருள் வழங்கிக் கொண்டிருக்கும் பிள்ளையாரில், எந்த ராசியினர் எந்த பெயரில் உள்ள பிள்ளையாரை வணங்கினால் மிகவும் உகந்தது.

செவ்வாய் ராசி நாதனாக இருக்கும் மனோ தைரியம் மிக்க மேஷ ராசியினர் ‘வீர கணபதி’ வணங்கி வந்தால் சிறப்பு யோகம் கிடைக்கும்.



சுக்கிரனின் யோகத்தை ராசி நாதனாக கொண்ட ரிஷப ராசியினர், ராஜ ராஜேஸ்வரியின் அம்சத்தில் இருக்கும்‘ஸ்ரீ வித்யா கணபதி’யை வணங்கினால் எல்லா வளமும் கிடைக்கும்.

புதன் ராசி நாதனாக இருக்கும் பல திறமைகளை தன்னுள் வைத்திருக்கும் மிதுன ராசியினர் ‘லட்சுமி கணபதி’யை வணங்கினால் அனைத்து யோகங்களும் வந்து சேரும்.

சந்திரன் யோகத்தை ராசி நாதனாக கொண்ட, பல கலைகளில் வித்தகராகத் திகழும் கடக ராசியினர், ‘ஹேரம்ப கணபதி’யை வணங்குதல் நல்லது.

இயற்கையிலேயே மிகவும் தைரிய குணம் கொண்ட, ஆளுமை மிக்க சிம்ம ராசியினர் ‘விஜய கணபதி’யை வணங்கி வந்தால் வாழ்க்கையில் ஜெயம் தான்.

புதன் ராசி நாதனாக கொண்ட கன்னி ராசிக்காரர்கள் தன்வாழ்க்கைத் துணையுடன் செயல்பட்டால் எவராலும் வெல்ல முடியாத அளவிற்கு உயர்வீர்கள். இவர்கள்‘மோகன கணபதி’யை வழிபட வாழ்க்கை சிறப்பாகும்.

சுக்கிரனை ராசிநாதனாக கொண்ட துலாம் ராசியினர் வானமே எல்லை என பரந்து சிந்தித்து செயல்படுவதில் வல்லவர்கள். இவர்கள் ‘ஷிப்ர ப்ரசாத கணபதி’யை வணங்கினால் நல்லது.

விருச்சிக ராசிக்கு செவ்வாய் ராசி நாதனாக உள்ளார். சுறுசுறுப்பான, நுண்ணறிவோடு செயல்படக்கூடிய விருச்சிக ராசியினர் சக்தி விநாயகரைவழிபட்டு வர எல்லா நலனும் கிடைக்கும்.

குரு பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த தனுசு ராசியினர், குரு அருளையும், கணபதி அருளையும் பெற ‘சங்கடஹர கணபதி’யை வழிபட்டு வாழ்வில் வளம் பெறுங்கள்.

நியாயத்தின் நீதிபதியாக, அனைவருக்கும் பொதுவாக செயல்படும் சனி பகவானின் ஆதிக்கத்தில் இருக்கும் மகர ராசியில் பிறந்த இவர்கள்,‘யோக கணபதி’யை வணங்கி வந்தால் எல்லாம் நன்மையாகும்.

சனி பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தும், அனைவரையும் அடக்கி ஆள விரும்பும் கும்ப ராசியினர், சித்தி விநாயகரை வணங்கி நல்ல புத்தி பெற்றிடுங்கள்.

குருவின் ஆதிக்கத்தில்இருக்கும் கள்ளம் கபடம் இல்லாத மீன ராசியினர்,‘பால கணபதி’யை வணங்கி வாழ்வாங்கு வாழலாம்.

 
மேலும் துளிகள் »
temple news
ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் கவுரி விரத பூஜை செய்யப்படுகிறது. கவுரி விரதத்தில் சிவனையும், அம்மனையும் ... மேலும்
 
temple news
ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசி பெருமாள் வழிபாட்டுக்கு உரிய சிறந்த நாள். கிருஷ்ணர் அர்ஜூனனுக்கு கீதையை ... மேலும்
 
temple news
திருமகளின் எட்டாவது வடிவம் கஜலட்சுமி. எட்டு திசைகளுக்கு உரிய யானைகள் நீராட்ட அவள் தாமரை மலரில் ... மேலும்
 
temple news
அறுகம்புல்லை தூர்வை என்பார்கள். அதை லட்சுமி சொரூபமாக பாவிக்கவேண்டுமென்று வேதம் உபதேசிக்கிறது. ... மேலும்
 
temple news
ஆவணி வளர்பிறை சப்தமி திதிக்கு முக்தாபரண சப்தமி என்று பெயர். முக்தா பரண் சப்தமி முக்கியமாக வட இந்திய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar