பதிவு செய்த நாள்
20
நவ
2012
12:11
பரமக்குடி: கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, பரமக்குடி தரைப்பாலம் அருகே சுப்பிரமணிய சுவாமி கோயிலில், காலை 9 மணிக்கு அபிஷேகம் நடந்தது. மதியம் 12க்கு, சுப்பிரமணிய சுவாமி, மாப்பிள்ளை அழைப்பு, 12.30க்கு, தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடந்தது. பாரதிநகர் செல்வக்குமரன் ஆலயத்தில், முருகன் வெள்ளி கவசத்தில், தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடந்தது. ஏற்பாடுகளை, திருச்செந்தில் ஆண்டவர் திருப்புகழ் சபையினர் செய்திருந்தனர்.
* ராமநாதபுரத்தில் குண்டுக்கரை முருகன், வழிவிடு முருகன்கோயிலில், முருகன் வள்ளி திருக்கல்யாணம் நடந்தது.