Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தினமலர் செய்தி எதிரொலி; திருவாடானை ... திருப்போரூர், பிரணவமலை கோவிலில் அடிப்படை வசதி மேம்படுத்தப்படுமா? திருப்போரூர், பிரணவமலை கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்மன் கோயில்களில் முளைப்பாரி உற்ஸவ விழா; களை கட்டிய கிராமங்கள்
எழுத்தின் அளவு:
அம்மன் கோயில்களில் முளைப்பாரி உற்ஸவ விழா; களை கட்டிய கிராமங்கள்

பதிவு செய்த நாள்

11 செப்
2024
03:09

திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே களிமண்குண்டு ஊராட்சியில் உள்ள சண்முகவேல் பட்டினத்தில் சமயபுரத்து முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவ விழா நடந்தது.


கடந்த செப்., 1 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. நேற்று முன்தினம் இரவு முளைப்பாரி ஊர்வலம் கிராமத்தில் வலம் வந்தது. நேர்த்திக்கடன் பக்தர்களால் மாவிளக்கு எடுக்கப்பட்டது. இன்று பகலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சண்முகவேல் பட்டினம் கடற்கரையில் நேற்று மாலை 5:00 மணிக்கு பாரி கங்கை சேர்க்கப்பட்டது. ஏற்பாடுகளை சண்முகவேல் பட்டினம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். 


* களிமண்குண்டு ஊராட்சியில் உள்ள மாரி வலசையில் உள்ள காந்தாரி அம்மனுக்கு முளைக்கொட்டு உற்ஸவம் நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. மூலவர் காந்தாரியம்மன், மகாகணபதிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று மாலை 4:00 மணிக்கு சக்தி கரகம் முன்னே செல்ல ஏராளமான பக்தர்கள் வலம் வந்தனர். ஏற்பாடுகளை மாரிவலசை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


* திருப்புல்லாணி அருகே தினைக்குளம் ஊராட்சி மொத்தி வலசையில் முத்துமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவ விழா நடந்தது. கடந்த செப். 1 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. இரவில் கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று மாலையில் அம்மன் கரகம் முன்னே செல்ல ஏராளமான பெண்கள் பாரியை சுமந்து குண்டூரணியில் கங்கை சேர்த்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று, கும்பாபிஷேக யாகசாலை இரண்டாம் கால பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சோளிங்கர்; யோக நரசிம்ம சுவாமியின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள் கோவில் கோடை உத்சவம், இன்று ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில்திருபவித்ரோத்சவ விழாவை ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை;  உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் குருபூர்ணிமா விழா நடந்தது. அதனை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar