குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பைரவர் யோகநிலையில் எழுந்தருளியுள்ளார். இவருக்கு அஷ்டமி தினங்களிலும், தினசரி அர்த்த சாம பூஜைகளும் சிறப்புக்குறியவை. இன்று வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலை 11:30 மணி அளவில் மூலவர் சன்னதியில் ரமேஷ்குருக்கள் உள்ளிட்ட சிவாச்சர்யர்களால் பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பதினொரு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பைரவர் அருள்பாலிக்க சிறப்பு தீபாராதனை நடந்தது. திரளாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.