Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கராபுரம் மாரியம்மன் கோவில் தேர் ... விழுப்புரம் லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு விழுப்புரம் லட்சுமிநாராயண பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

16 செப்
2024
10:09

விழுப்புரம்; விழுப்புரம் வைகுண்டவாசப் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் திரண்டு வழிபட்டனர்.


விழுப்புரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஜனகவல்லி நாயிகா சமேத ஸ்ரீ வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில், திருப்பணிகள் நடந்து, பெருந்தேவி தாயார், ஆண்டாள், சக்கரத்தாழ்வார் சன்னதிகள் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பணிகள் முடிந்து கும்பாபிஷேக பெருவிழா நேற்று நடந்தது. கடந்த 13ம் தேதி காலை 8:00 மணிக்கு யாகசாலை பூஜையுடன் விழா தொடங்கியது. இரவு 9:00 மணிக்கு முதல் காலபூஜையும், யாகங்களும் தொடங்கி நடந்தது. 14ம் தேதி காலை 7:00 மணிக்கு கும்ப ஆராதனம், மஹாசாந்தி ஹோமம், நித்ய ஹோமங்களும், இரண்டாம் கால பூஜையும் நடந்தது. இரவு 9:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை 4:00 மணிக்கு புண்யாஹவாசனம், விஸ்வரூபம், அக்னிப்ரணயனம், ஹோமங்களும், யாத்ராதானமும், காலை 7:30 மணிக்கு கும்ப புறப்பாடாகி புனித நீர் கொண்டு வந்து, காலை 8:30 மணிக்கு ஜனகவல்லி நாயக சமேத வைகுண்டவாசப்பெருமாள் சன்னதி, அனைத்து விமானங்கள், பரிவாரங்கள், ராஜகோபுரங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடந்தது. திருக்கோவிலுார் ஜீயர் உ.வே.தேகளீச ராமானுஜாச்சாரியார், பரனூர் கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் வெங்கடகிருஷ்ணன் விழாவை நடத்தினர்.


இதில் விசாலாட்சி பொன்முடி, முன்னாள் எம்.பி., கவுதமசிகாமணி, எம்.எல்.ஏ., லட்சுமணன், முன்னாள் சேர்மன் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், கன்னிகா பரமேஸ்வரி குணசேகரன், ஆர்.கே.மோட்டார்ஸ் குபேரன் செட்டியார், பாலமுருகன், வள்ளி ஜிவல்லரி பாண்டுரங்கன், அர்ச்சனா ஓட்டல் சுப்புராமன், ஏ.எஸ்.ஜி., கோபி, ஹரி ஜிவல்லரி கொளஞ்சிராஜன், மகேஷ்குமார், அரிமா சங்கம் தனபால், கோபு, சரஸ்வதி மெட்ரிக் பள்ளி ராஜசேகர், முத்துசரவணன், மகாலட்சுமி டி.வி.எஸ்., வருண்குமார், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சீனுவாசகுமார், எம்.ஜி.ஆர்., மன்றம் தனுசு, பாலமணிகண்டன், ஓம்சக்தி கன்ஸ்ட்ரக்ஷன் சதீஷ்ராஜாராம், ஜி.டி.தங்கமாளிகை ராஜ்குமார், பாலாஜி, துவாரகநாத் எண்டர்பிரைசஸ் பேச்சர்லால், மணிஷ், தே.மு.தி.க., ஆதவன்முத்து மற்றும் பொது மக்கள் பலர் கலந்துகொண்டு வழிபட்டனர். தொடர்ந்து, பஜனா மண்டலியின் பஜனை நடந்தது. இரவு 8:00 மணிக்கு நாச்சியாருடன் சேஷ வாஹனத்தில் பெருமாள் வீதியுலா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், டிசம்பரில் நடக்கும் சேவைகளுக்கான முன்பதிவு தேதி ... மேலும்
 
temple news
தென்காசி: பிரசித்தி பெற்ற ஆலங்குளம் பத்திரகாளி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி கடைசி மற்றும் ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருச்சூர் நகரில் ஓணம் பண்டிகையை ஒட்டி நடந்த புலிக்களி நடன நிகழ்ச்சி வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அனந்த விரத உற்சவம் நடந்தது. எமனேஸ்வரம் ... மேலும்
 
temple news
சென்னை; ‘தினமலர்’ நாளிதழ் மாணவர் பதிப்பான ‘பட்டம்’ சார்பில் நடத்தப்படும், ‘அ’னா... ‘ஆ’வன்னா... அரிச்சுவடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar