Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஏகாம்பர சிவன் கோயிலில் 16 வகை ... நத்தம் அரண்மனை சந்தனக்கருப்பு சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நத்தம் அரண்மனை சந்தனக்கருப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; நமச்சிவாயா கோஷத்துடன் கோலாகலம்
எழுத்தின் அளவு:
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; நமச்சிவாயா கோஷத்துடன் கோலாகலம்

பதிவு செய்த நாள்

16 செப்
2024
12:09

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் மூல கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, பக்தர்கள் நமச்சிவாய கோஷத்துடன் மகா கும்பாபிஷேகம் நடந்தது.

அந்தகா சூரனை சம்ஹாரம் செய்து, தேவர்களுக்கு அனுகிரகம் செய்த ஸ்தலம். அட்ட வீரட்டானங்களில் இரண்டாவது வீரட்டானம். ஞானசம்பந்தர், அப்பர் ஆகியோரால் பாடல் பெற்ற பழமையான புனித ஸ்தலமாக கருதப்படுகிறது, திருக்கோவிலூர், கீழையூர், வீரடானேஸ்வரர் கோவில். பழமையும், பெருமையும் மிக்க கோவில் புனரமைக்கப்பட்டு, எண்மருந்து சாற்றி, மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. முன்னதாக அதிகாலை 3:00 மணிக்கு எட்டாவது கால யாக வேள்வி, கலச பூஜை, மகாபூர்ணாகுதி, கடம் புறப்பாடாகி சுவாமி, அம்மன், விமான ராஜகோபுரங்கள், மூலஸ்தான கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, மலர் தூவி, பக்தர்களின் நமச்சிவாயா கோஷத்துடன், மூல கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. இரவு பஞ்ச மூர்த்திகள் திருக்கல்யாண வைபவம், தொடர்ந்து பெரிய ரிஷப வாகனத்தில் வீதி உலா நடந்தது. வான வேடிக்கையுடன் நடைபெற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நகராட்சி சேர்மன் முருகன், முன்னாள் எம்.பி., ஆதிசங்கர், தொழிலதிபர்கள் முருகன், தியாகராஜன், நகராட்சி துணை சேர்மன் உமா மகேஸ்வரி குணா, நகர மன்ற உறுப்பினர்கள் சம்பத், கோவிந்த், அறங்காவல் குழு தலைவர் ஜெய்சங்கர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் விழா குழுவினர், கீழையூர் பக்தர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை: திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, அமராவதி ஆற்றங்கரையில், குமரலிங்கம், கல்லாபுரம் பகுதியில், ... மேலும்
 
temple news
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் பல்வேறு நிலைகளில் விநாயகர் அருள்பாலித்து கொண்டிருக்க, ... மேலும்
 
temple news
மீஞ்சூர்: வடகாஞ்சி எனப்படும் மீஞ்சூர் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோத்சவம், ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி – கன்னிகாபுரம் மாநில நெடுஞ்சாலையில் சப்த கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த இளையனார்வேலுாரில் முருகன் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar