Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருக்கோவிலூர், கீழையூர், ... சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்; மதுக்கரை தர்மலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நத்தம் அரண்மனை சந்தனக்கருப்பு சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
நத்தம் அரண்மனை சந்தனக்கருப்பு சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

16 செப்
2024
12:09

நத்தம்; நத்தம் அரண்மனை சந்தனக்கருப்பு சுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நத்தத்தின் காவல் தெய்வமாக விளங்கும் அரண்மனை சந்தனக்கருப்பு சுவாமிக்கு புதிதாக கல்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு அதற்கான கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி முதல்நாள் அலங்கரிக்கப்பட்ட யாகசாலையில் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.தொடர்ந்து நேற்று முன்தினம் இரண்டாம் மற்றும் முன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. பின்னர் நேற்று காலையில் நான்காம் கால யாகசாலை பூஜைகளை தொடர்ந்து காசி, ராமேஸ்வரம்,கங்கை, காவேரி,கரந்தமலை அழகர்மலை, திருமலைக்கேணி உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டிருந்த புனித தீர்த்தகுடங்கள் மேளதாளம் முழங்க, ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. பின்னர் அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் கலசத்தில் ஊற்றப்பட்டது. தொடர்ந்து பரிவார தெய்வங்களான கற்பக விநாயகர், வழிவிடும் விநாயகர், சுப்பிரமணியர், நாகம்மாள், சப்த கன்னிகள் சுவாமி கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. இதில் நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்‌.கண்ணன், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து புனித தீர்த்தமும் பூஜை மலர்களும், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை எம்.ஜி.ஆர்., நகர் ஊர் பொதுமக்கள், மறவர் சமுதாய இளைஞர் அணி,விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை: திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே, அமராவதி ஆற்றங்கரையில், குமரலிங்கம், கல்லாபுரம் பகுதியில், ... மேலும்
 
temple news
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் பல்வேறு நிலைகளில் விநாயகர் அருள்பாலித்து கொண்டிருக்க, ... மேலும்
 
temple news
மீஞ்சூர்: வடகாஞ்சி எனப்படும் மீஞ்சூர் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோத்சவம், ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி – கன்னிகாபுரம் மாநில நெடுஞ்சாலையில் சப்த கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: வாலாஜாபாத் அடுத்த இளையனார்வேலுாரில் முருகன் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar