ராமேஸ்வரம் அக்னி தீர்த்த படிக்கட்டுகள் சேதம் : பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2024 10:09
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோவில் அக்னி தீர்த்த படிக்கட்டுகள் சேதமடைந்து கிடப்பதால் பக்தர்கள் சிரமத்துடன் நீராடி செல்கின்றனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து, கோயில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதில் 2019ல் மத்திய சுற்றுலா நிதியில் அக்னி தீர்த்த கடற்கரையில் சிமெண்ட் சிலாப்புகள் வைத்து படிக்கட்டுகளாக அமைத்தனர். இந்த சிமெண்ட் சிலாப்புகள் ராட்சத அலையில் சிக்கி உடைந்து தாறுமாறாக கிடக்கிறது. கூட்டம் நெரிசல் சமயத்தில் இவ்வழியாக நீராட செல்லும் பக்தர்கள் நிலை தடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர். இதனை முழுவதுமாக அகற்றி இயற்கை சார்ந்த கடற்கரை மணல் பரப்புடன் அமைக்க ஹிந்து அமைப்பினர் பலமுறை வலியுறுத்தியும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. அவசரகதியில் சிமெண்ட் சிலாப் அமைத்து மத்திய சுற்றுலா நிதியை வீணடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, பக்தர்கள் நலன் கருதி அக்னி தீர்த்த கடற்கரை சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.