கும்பகோணம் மகாமக பெருவிழாவை தேசிய விழாவாக அறிவிக்க வேண்டும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23செப் 2024 11:09
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், அகில பாரத இந்து மகாசபா ஆலய பாதுகாப்பு பிரிவு சாா்பில், ஆகமம், ஆலயம், ராஜராஜ சோழன் மணி மண்டபம் அமைக்க வலியுறுத்தி மாநாடு நடைபெற்றது. ஆலய பாதுகாப்பு மாநில தலைவா் ராம. நிரஞ்சன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் பாலசுப்பிரமணியன், திரைப்பட இயக்குநா் மோகன், சூரியனாா்கோவில் ஆதீனம், திருவாரூா் ஸ்ரீ சங்கரநாராயண பீடம் சிவாஜி சந்தோஷ் சுவாமிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர். மாநாட்டில், கும்பகோணம் அருகே உடையாளூரில் ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும், அனைத்து மாவட்டத்திலும் ராஜராஜ சோழன் சிலையை நிறுவ வேண்டும், கும்பகோணம் மகாமக திருவிழாவை தேசிய திருவிழாவாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.