Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news 221 கிலோ லட்டில் பெருமாளின் விஸ்வரூப ... திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி திருவரங்கம் அரங்கநாத பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆழியாறுக்கு நன்றி தெரிவித்து ஆரத்தி பெருவிழா! குருமகா சந்நிதானங்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
ஆழியாறுக்கு நன்றி தெரிவித்து ஆரத்தி பெருவிழா! குருமகா சந்நிதானங்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

28 செப்
2024
10:09

பொள்ளாச்சி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும், ஆரத்தி பெருவிழா நேற்று நடந்தது. விழாவுக்கு முன்னதாக, ஆனைமலை திரவுபதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.


கோவிலில் இருந்து, தமிழகத்தின் குருமஹா சந்நிதானங்கள், ஆதீனகர்தாக்கள், துறவியர், ஆன்மிக பெரியோர் ஊர்வலமாக ஆழியாறு ஆற்றங்கரைக்கு வந்தனர். அங்கு, வாழ்வாதாரம், சுகாதாரம், பெருமை, கவுரவமாக விளங்கும் ஆழியாறு தாய்க்கு நன்றி தெரிவித்து ஆரத்தி எடுத்தனர். தொடர்ந்து, ஆசி வழங்கினர். தமிழ்நாடு அரசு, ஹிந்து சமய அறநிலையத்துறை உயர்நிலைக்குழு உறுப்பினர் பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கோவை நான்காவது குருமகா சந்நிதானங்கள் சிரவை ஆதீனம் கவுமாரமடம் ராமானந்த குமர குருபர சுவாமிகள், ஆனைமலை ஆர்ஷய வித்யா பீடம் பூஜ்யஸ்ரீ ததேவானந்த சரஸ்வதி சுவாமிகள், அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் நிறுவனர் சுவாமி ராமானந்த மஹராஜ், ஸ்ரீ வாகீசர் மடாலயம் அவிநாசி ஆதீனம் காமாட்சிதாச சுவாமிகள் உள்ளிட்ட ஆதீனங்கள், துறவியர், ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, அகில பாரத சந்நியாசிகள் சங்கம், ஆர்ஷ வித்யா பீடம், மஹாத்மா காந்தி ஆசிரமம், விவேகானந்தா அறக்கட்டளை, ஆலம் விழுது அமைப்பினர் செய்திருந்தனர். ஆற்றில் கழிவு நீர் கலக்க கூடாது, குப்பையை கொட்டக்கூடாது, இறந்த விலங்குகளை வீசக்கூடாது, நீரின் புனிதம் காக்க வேண்டும் என உறுதி எடுக்க வேண்டும், ஆண்டு தோறும் பவுர்ணமி நாளில், ஆரத்தி விழா நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar