காளஹஸ்தி சிவன் கோவிலில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் பாரம்பரிய உடைகள் அணிந்து வர உத்தரவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2024 12:09
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் பாரம்பரிய உடைகள் குறித்து கோயில் (பொறுப்பு) செயல் அலுவலர் சந்திரசேகர ஆசாத் சிறப்பு அறிவிப்பு பலகையை ஏற்பாடு செய்ய வைத்தார் . கடந்த நான்கு நாட்களுக்கு முன் கோயில் செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற அவர், கோவிலில் பணிபுரியும் அனைத்துத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் பாரம்பரிய உடைகளை அணிய வேண்டும் என முதலில் விதிமுறையை விதித்தார். அதை அனைவரும் கோயில் (ஊழியர்களும்) கடைபிடிக்கிறார்கள். அதேபோல் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களும் பாரம்பரிய உடைகளை பின்பற்றி ஒத்துழைக்கும் வகையில் (அறிவிப்பு ) பலகைகளை அமைத்துள்ளார். கோவிலின் தெற்கு கோபுரம் அருகில் ஒரு பலகை ஃப்ளெக்ஸி (போர்ட்) நிறுவப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.