காஞ்சிபுரம்; வாலாஜாபாத் அடுத்த, தேவரியம்பாக்கம் கிராமத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. 17வது ஆண்டு புரட்டாசி உற்சவத்தை முன்னிட்டு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாளுக்கு 21 விதமான வாசனை திரவியப் பொடி கலவையால் அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீனிவாச பெருமாள் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். முத்திரை ஸ்தானம் பெற்ற பெருமாள் பக்தர்கள் பஜனை பாடினர். இந்த புரட்டாசி மாத விழாவிற்கான ஏற்பாடுகளை, அதே கிராமத்தைச் சேர்ந்த ஞானபிரகாசம், தேவராஜ் குடும்பத்தினர் செய்திருந்தனர்.