Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி அருகே 1200 ஆண்டுகள் பழமையான ... அஞ்சல் அலுவலகத்தில் புனிதமான கங்கை தீர்த்தம் விற்பனை அஞ்சல் அலுவலகத்தில் புனிதமான கங்கை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல்லடம் விநாயகர் கோவில் உண்டியல் மாயம்; போலீசார் விசாரணை
எழுத்தின் அளவு:
பல்லடம் விநாயகர் கோவில் உண்டியல் மாயம்; போலீசார் விசாரணை

பதிவு செய்த நாள்

01 அக்
2024
03:10

பல்லடம்; பல்லடம் அருகே, விநாயகர் கோவில் உண்டியல் மாயமானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


பல்லடம் அடுத்த, கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலை, காரணம்பேட்டை பகுதியில், கூப்பிடு பிள்ளையார் கோவில் உள்ளது. காரணம்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு, தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு செய்கின்றனர். தனியாருக்கு சொந்தமான கோவிலின் உட்புறம் மற்றும் வெளியே உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. முன்தினம், அன்றாட பூஜைகள் முடிந்து வழக்கம்போல் இரவு கோவில் நடை சாற்றப்பட்டது. தொடர்ந்து, இன்று காலை கோவில் திறந்தபோது, கோவிலுக்கு வழி பகுதியில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல் மாயமானது. சிமெண்ட் பூச்சுடன் சேர்த்து உண்டியலும் பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு அருகிலுள்ள மரத்தடியில் அமர்ந்து சாவகாசமாக மது அருந்திவிட்டு, அதன் பிறகு உண்டியலை திருடி சென்றதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. நவராத்திரி விழா துவங்க உள்ள நிலையில், கோவில் அருகே, சூலூரைச் சேர்ந்த வட மாநில குடும்பத்தினர் சிலை பிரதிஷ்டை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, விநாயகர் கோவில் உண்டியல் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, பல்லடம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த காலமாக, மகாளய பட்சம் கருதப்படுகிறது. இக்காலத்தில் தர்ப்பணம் செய்தால், ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி ; திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி பத்மநாபபுரம் ... மேலும்
 
temple news
கோவை ; கோவை, நேரு ஸ்டேடியம் ஆடிஸ்வீதி தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழா அக்., 3ல் ஆனந்தவல்லி ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில் நவராத்திரியை பெருவிழாவை முன்னிட்டு, சக்தி கொலுவுடன் பத்து நாள் விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar